கண்ணதாசன் வருவதைப் பார்த்து தெறித்தோடிய சந்திரபாபு - ஏன்னு தெரியுமா?
அந்த காலத்தில் சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் கவிஞர் கண்ணதாசன் மீது மரியாதையும், அன்பும் அதிகமாக இருந்தது. கண்ணதாசனின் கவிதைக்கும், பாட்டுக்கும், கட்டுரைக்கும் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கண்ணதாசன்.
பாடல்கள் மட்டுமல்ல, படங்களையும் தயாரித்துள்ளார் கண்ணதாசன். படங்களுக்கு அவரே வசனமும் எழுதியுள்ளார். இந்நிலையில், கண்ணதாசன் பற்றிய ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தெறித்தோடிய சந்திரபாபு
அந்த காலத்தில் படப்பிடிப்பில் நடந்த சில சுவாரஸ்ய தகவலை உதவி இயக்குனரும், நடிகருமான ரா. சங்கரன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், கால்ஷீட் பிரச்சினையை அடிக்கடி சந்தித்து வந்தவர் நடிகர் சந்திரபாபு. இவர் ஒழுங்கா ஷூட்டிங் வரமாட்டார். வந்தாலும் விடாபிடியாக நடித்துக் கொடுத்து விட்டு தான் போவார்.
இதனையடுத்து, கண்ணதாசன் வசனத்தில் அவரே தயாரித்து கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘கவலையில்லாத மனிதன்’ திரைப்படம். இப்படத்தில் நடிகர் சந்திரபாபு தான் கதாநாயகன். ஆனால், இப்படத்தில் நடித்த சந்திரபாபுவால் கண்ணதாசன் அதிக கஷ்டங்களை அனுபவித்தார்.
இப்படத்தின் கடைசி க்ளைமாக்ஸ் படமாக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், படப்பிடிப்பு தளத்திற்கு சந்திரபாபு வரவே இல்லை.
உடனே கண்ணதாசன் நானே போய் அவரை அழைத்து வருகிறேன் என்று சந்திரபாபு வீட்டிற்கு போயுள்ளார். ஆனால் இவர் வருவதை அறிந்த சந்திரபாபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஒரு வழியாக அவரை தேடி கண்டுபிடித்து படத்தில் நடிக்க வைத்துள்ளளனர் என்று தெரிவித்துள்ளார்.