முருகன் மாநாடு நடத்திலாம் பாஜக தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியாது - கனிமொழி
முருகன் மாநாடு நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் பாஜக கால் ஊன்ற முடியாது என கனிமொழி தெரிவித்துள்ளார்.
முருகன் மாநாடு
கன்னியாகுமரியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
திமுக தலைமையிலான கூட்டணியில் வெகு காலமாக ஒன்றிணைந்து பயணிக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நல்ல நட்பில் இருக்கிறார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இப்போது முருகனை கையில் எடுத்து உள்ளோம்.
கனிமொழி உறுதி
அடுத்து தமிழகத்தை கையில் எடுப்போம் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் எப்போதுமே பாஜக கால் ஊன்ற முடியாது. அது எக்காரணத்தைக் கொண்டும் நடக்காது.
முன்னதாக கனிமொழி எம்.பி.யை, அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சரும் தமிழக உணவு ஆணைய தலைவருமான சுரேஷ் ராஜன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு,
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Technology: 3600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் பொருளா? உலகையே மிரளவைத்த சீனாவின் கண்டுபிடிப்பு! Manithan

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
