ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக ரஷ்யா செல்லும் கனிமொழி - காரணம் என்ன?

Smt M. K. Kanimozhi Pakistan India Russia Operation Sindoor
By Karthikraja May 18, 2025 08:15 AM GMT
Report

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை உலக அரங்கில் அம்பலப்படுத்த மத்திய அரசு 7 குழுக்களை அமைத்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியழித்தது. 

ஆபரேஷன் சிந்தூர்

இதனையடுத்து, ட்ரோன்கள் மூலம் இந்தியாவின் எல்லைப்பகுதிகளுக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இதனை முறியடித்து, பதிலடி கொடுத்தது.

இதனால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த போர் பதற்றம் கடந்த 10 ஆம் தேதி ஏற்பட்ட போர் நிறுத்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக 7 குழு

இந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளிப்பது, சர்வதேச அமைப்புகளின் நிதியை எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துவது போன்று பாகிஸ்தான் அரசு தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதை உலக அரங்கில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்த மத்திய அரசு முன்வந்துள்ளது.

இந்​தி​யா​வுக்கு எதி​ராக இது​வரை நடத்​தப்​பட்ட பயங்கர​வாத தாக்​குதல்​களில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவு அமைப்​பான ஐஎஸ்ஐ க்கு உள்ள தொடர்​பு, ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை, இந்​தி​யா​வுக்கு எதி​ரான பாகிஸ்​தானின் பொய் பிரச்​சா​ரங்​கள் ஆகியவை குறித்த ஆதாரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

இதற்காக, அனைத்து கட்சி எம்​பிக்​கள் அடங்​கிய 7 குழுக்​களை உலகின் பல நாடுகளுக்கும் அனுப்ப முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. ஒவ்வொரு குழுவிலும் 5 முதல் 8 எம்பிக்கள் மற்றும் வெளி​யுறவு அமைச்​சகத்​தின் மூத்த அதி​காரி ஒரு​வரும் இடம்​பெறுவார்கள். 

நாடாளு​மன்ற விவ​கார துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு இந்த குழுக்​களின் ஒருங்​கிணைப்​பாள​ராக இருப்​பார். இந்த ​குழு​வினர் வரும் 23 ஆம் தேதி முதல், அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்​டன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்​பான், உட்பட 32 நாடு​களுக்கு 10 நாட்​கள் பயணம் மேற்கொள்​ள உள்ளனர்.

ரஷ்யா செல்லும் கனிமொழி

காங்கிரஸ் கட்சியின் சசிதரூர், பாஜகவின் ரவி சங்கர் பிரசாத் எம்பி, பைஜெயந்த் பாண்டா, திமுகவின் கனிமொழி ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் சஞ்சய் குமார் ஷா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, சிவசேனாவின் ஸ்ரீகண்ட் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யா, ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்கிறது. 

dmk mp kanimozhi

பைஜெயந்த் பாண்டா தலைமையிலான குழு சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கும், ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கும் செல்கிறது.

சஞ்சய் குமார் ஜா தலைமையிலான குழு இந்தோனேசியா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும், ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழு ஐக்கிய அரபு அமீரகம், லைபீரியா, காங்கோ, சியரா லியோன் ஆகிய நாடுகளுக்கும் செல்கிறது. 

shashi tharoor

சசி தரூர் தலைமையிலான குழு அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளுக்கும், சுப்ரியா சுலே தலைமையிலான குழு எகிப்து, கத்தார், எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்த குழுக்கள், அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகளுடன் இந்த ஆதாரங்களை வழங்கி, பாகிஸ்தானை உலக அரங்கில் தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 

bilawal bhutto

இதற்கு போட்டியாக, பாகிஸ்தானும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையில் குழு அமைத்து உள்ளது. சமீபத்தில் சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால், இந்தியர்களின் ரத்தம் ஒடும் என்று பிலாவல் பூட்டோ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.