இணையத்தில் வைரலாகும் நடிகை கங்கனா ரணாவத்தின் புது வருட பிரார்த்தனை
திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை கங்கனா ரனாவத், 2022-இல் தனக்கு குறைவான போலீஸ் புகார்கள், எஃப்ஐஆர்கள் மற்றும் அதிக காதல் கடிதங்கள் வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், புத்தாண்டு அன்று திருப்பதி ஏழுமலையான் மற்றும் காளஹஸ்தி கோயிலுக்கு சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் “அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்... திருப்பதி பாலாஜியின் ஆசியுடன் இந்த ஆண்டு தொடங்கும். இது ஒரு மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காளஹஸ்தி சிவன் கோயிலில் வழிபட்டது மற்றும் ஒரு பசுவிற்கு உணவளித்தது போன்ற படங்களைப் பகிர்ந்து,
“உலகில் ஒரே ஒரு ராகு கேது கோயில் உள்ளது. இது திருப்பதி பாலாஜிக்கு மிக அருகில் உள்ளது. அங்கு சில சடங்குகளை செய்தேன். ஐந்து அடிப்படை லிங்கங்களில், வாயு லிங்கா இங்கு அமைந்துள்ளது. மிகவும் குறிப்பிடத்தக்க இடம்.
எனது அன்புக்குரிய எதிரிகளின் கருணையைப் பெற நான் அங்கு சென்றேன். இந்த ஆண்டில் எனக்கு குறைவான போலீஸ் புகார்கள், எஃப்ஐஆர்கள் மற்றும் அதிக காதல் கடிதங்கள் வர வேண்டும்…. ஜெய் ராகு கேது ஜி கி” என்று பதிவிட்டுள்ளார்.