பிரிட்ஜில் வைத்த உணவை சூடு பண்ணி கொடுத்த முனியாண்டி விலாஸ் - அபராதம் விதித்த அதிகாரிகள்!
காஞ்சிபுரத்தில் உள்ள முனியாண்டி விலாஸ் கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
உணவகம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முயாண்டி விலாஸ் உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் சில நாட்களாகவே முன்னரே சமைத்து பிரிட்ஜில் வைத்த உணவை மீண்டும் எடுத்து சூடு செய்து தருவதாக குற்றசாட்டு எழுந்தது.
இதனை காஞ்சிபுரம் அதிமுக மாமன்ற உறுப்பினர் சிந்தன் வாட்ஸ் ஆப் மூலமாக உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு புகாரளித்தார். இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த உணவகத்தில் சென்று சோதனை செய்தனர்.
அதிரடி ஆக்ஷன்
இந்நிலையில், அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டதில் நேற்று சமைத்த உணவை மீண்டும் பதப்படுத்தி விற்பனை செய்ய வைத்திருந்ததும், உணவகத்தை அசுத்தமாக வைத்திருந்ததாகவும், அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்கு மாநகராட்சி சார்பில் ரூபாய் 2000 அபராதம் விதித்தனர்.
மேலும் அந்த உணவகத்தை சுத்தம் செய்தபின் சோதனை நடத்தப்படும் அதற்கு பின்னரே உணவகத்தை திறக்கவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தது உணவகத்தை மூடினர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த இந்த உணவகம் தரமற்ற முறையில் இருந்தது ஆய்வில் தெரிய வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.