பட்டாசு ஆலை வெடி விபத்து; 9 பேர் பரிதாப பலி - ஆட்சியர் நேரில் ஆய்வு!

Kanchipuram Death
By Sumathi Mar 22, 2023 07:57 AM GMT
Report

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெடி விபத்து 

காஞ்சிபுரம், குருவிமலை வலத்தோட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான தனியார் வெடி பொருள் தயாரிக்கும் குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனில் 25க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என பலர் வேலை செய்து வருகின்றனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்து; 9 பேர் பரிதாப பலி - ஆட்சியர் நேரில் ஆய்வு! | Kanchipuram Crackers Company Blast Death

இன்று காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் சம்பவ இடத்தில் 30 க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, டி ஐ ஜி பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

அப்பகுதியை சேர்ந்த விஜயா, பூபதி, உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலையின் உரிமையாளர் சுதர்சன்(37) தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.