ஊக்கமருந்து பயன்படுத்திய கமல்ப்ரீத் கவுர் - சர்வதேச போட்டிகளில் விளையாட 3 ஆண்டுகள் தடை...!
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தி, இந்திய வட்டு எறிதல் வீராங்கனை கமல்ப்ரீத் கவுருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீராங்கனை கமல்ப்ரீத் கவுர்
இந்திய வட்டு எறிதல் வீராங்கனையாக வலம் வந்தவர் கமல்பிரீத் கவுர். இவர் டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் 2வது இடம் பிடித்தார். இதனையடுத்து, இறுதி போட்டியில் அவருக்கு 6-வது இடம் கிடைத்தது.
இதன் பின்பு, இவருக்கு கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி ஊக்க மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இவர் தடை செய்யப்பட்ட ஸ்டானோசோலோல் என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த குற்றத்தை கடந்த ஏப்ரல் 11ம் தேதி கமல்பிரீத் கவுர் ஒப்புக் கொண்டார். இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் விளையாட 3 ஆண்டுகள் தடை விதித்து, தடகள ஒருமைப்பாடு பிரிவு அறிவித்திருக்கிறது.