வட்டு எறிதலில் வியக்க வைக்க கமல்ப்ரீத்.. ஆட்டத்தை கவனிக்காமல் தந்தை செய்த செயல்..
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் வட்டு எறிதல் இறுதி போட்டிக்கு கமல்பிரீத் கவுர் தகுதி பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கின் 9வது நாளான இன்று பெண்கள் வட்டு எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது.இதில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் 64 மீட்டர் தூரம் வட்டு ஏறிந்து இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தினார். இதனால் முதல் 12 இடங்களுக்குள் நுழைந்த கமல்பிரீத் கவுர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
கமல்பிரீத் கவுர் தன்னுடைய முதல் சுற்றில் 60.29 மீட்டர் தூரமும், இரண்டாவது சுற்றில் 63.97 மீட்டரும், கடைசி மற்றும் மூன்றாவது சுற்றில் 64.00 மீட்டர் தூரம் வீசி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று வியக்க வைத்தார். இறுதிப் போட்டி வரும் ஆகஸ்ட் 2ம் தேதி மாலை 4:30 மணிக்கு நடைபெறுவதால் இந்திய அணிக்கு மற்றொரு பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையில் மகள் கமல்ப்ரீத் விளையாடுவதை பார்க்காமல்,அவரது தந்தை குல்தீப் சிங் தனது விவசாய பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார் . போட்டி தொடங்கும் நேரத்தில் வேறு எதையோ டிவியில் ஒளிபரப்ப தனது விவசாய பணிகளை பார்க்கப்பட்டதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.