கொரோனாவிலிருந்து மீண்டதும் கமல்ஹாசன் வெளியிட்ட மிக முக்கிய அறிக்கை
கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில் மிக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது லேசான இருமல் தொந்தரவுகள் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
இதில் கொரோனா தொற்று உறுதியானதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கமல்ஹாசனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது முற்றிலும் குணமாகி வீடு திரும்பியுள்ளார், அவர் “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்ற தலைப்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதாவது, முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்.
முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன். pic.twitter.com/IScdLsBjOL
— Kamal Haasan (@ikamalhaasan) December 4, 2021