தஞ்சாவூர் கோவில் கட்ட முடியாம போகலாம்... ஆனா கக்கூஸ் ? - கமல் பேசியது என்ன
நடிகர் கமல்ஹாசன் 35 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். நேற்று கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்ள் பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்"கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, வன்முறை, ஆபாச பேச்சு, ஊழல், கமிஷன் அதெல்லாம் இல்லாமல் ஒரு கட்சி இயங்கவே முடியாது என்பதை கல்வெட்டு மாதிரி எழுதி வைத்திருக்கிறார்கள்.
அந்த கல்வெட்டுகளை எல்லாம் நாம் தகர்த்தெறிய தெரிய வேண்டும். நம்மாள் பிரகதீஸ்வரர் ஆலயம் எல்லாம் கட்ட முடியாம கூட போகலாம். ஆனால் கக்கூஸ் கட்டுனா எனக்கு பெருமை , நான் இதை குறையாக சொல்லவில்லை நமக்கு இருக்கும் வசதிக்கு இதைத்தான் செய்ய முடியும் என்று கூறினார்.
ஒரு ஊரையே கட்டியாண்டால் நாளந்தா யுனிவர்சிட்டி பண்ணலாம் இப்போது நம்மால் என்ன முடியுமோஅதைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனக் கூறிய கமல்ஹாசன்.
ஒரு பாயில் எட்டு மணி நேரம் முழுவதுமாக உறங்கி விட்டால் போதும்,நம்க்கு இந்த பாய் போதும், அதனை பறக்கும் கம்பளமாக மாற்றும் சக்தி உங்களிடம் தான் உள்ளது என்று கூறினார்.