உடல் நிலை சரியில்லாத நேரத்தில் மீன் குழம்பு கேட்ட கமல்... - மயில் சாமி என்ன செய்தார்ன்னு தெரியுமா?

Kamal Haasan Tamil Cinema Mayilsamy
By Nandhini Feb 23, 2023 04:00 PM GMT
Report
115 Shares

மீன் குழம்பு கேட்ட நடிகர் கமலுக்கு மயில் சாமி செய்த விஷயம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நகைச்சுவை நடிகர் உயிரிழப்பு

மயில்சாமி தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி. கடந்த சனிக்கிழமை சிவராத்திரி பூஜையில் ட்ரம்ஸ் சிவமணியுடன் இணைந்து கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தார்.

கோயிலுக்கு சென்றுவிட்டு மறுநாள் அதிகாலைக்கு இல்லம் திரும்பிய மயில்சாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மயில்சாமியின் இறப்பு தமிழ் சினிமாத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சினிமாத்துறையினரும், ரசிகர்களும் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

kamal-hasan-mayilsamy-tamil-cinema

மீன் குழம்பு கேட்ட கமல்

இந்நிலையில், நடிகர் மயில்சாமியை குறித்து யாரும் அறியாத சில தகவல்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர்கள் ரஜினிக்கும், கமலுக்கும் மயில்சாமி வீட்டு மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்குமாம். இதனால், பலமுறை அவர்களின் வீட்டுக்கு மயில்சாமியின் மீன் குழம்பை வீட்டில் செய்து கொண்டு செல்வாராம். ஒருமுறை கமல், மயில் சாமிக்கு போன் செய்து எனக்கு இன்று மீன் குழம்பு வேண்டும் என்று கூறி போனை வைத்துவிட்டாராம்.

அந்த நாள் பார்த்து மயில்சாமியின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாம். எனவே, வீட்டிலிருந்து பாத்திரத்தை எடுத்துச்சென்று சென்னையில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் மீன் குழம்பை வாங்கி நடிகர் கமலிடம் கொடுத்தாராம்.

மீன் குழம்பை சாப்பிட்டு விட்டு கமல், அந்த கடையின் பெயரை சரியாக சொல்லி மயில் அந்த கடை மீன் குழம்பு ரொம்ப பிரமாதமாக இருக்கு என்றாராம். அந்த அளவுக்கு பல சுவாரஸ்ய சம்பவங்கள் கமலுக்கும், மயில்சாமிக்கும் இடையே நடந்துள்ளதாம். 

You May Like This Video