வாளை வாங்க மறுப்பு; மேடையில் ஆத்திரமடைந்த கமல் - ஓடிவந்த போலீசார்!
வாள் கொண்டு வந்த தொண்டரை பார்த்து கமல்ஹாசன் மிகவும் கோபமடைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கையில் வாள்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக சென்னையில் பாராட்டு விழா ஒன்று நடைபெற்றது.
இந்த விழாவில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்க கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்ததோடு சில பரிசுகளையும் கொடுத்தனர்.
கொந்தளித்த கமல்
அதில், ஒரு ரசிகர் கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ் குமாருடன் இருக்கும் புகைப்படத்தை பரிசாக கொடுத்தார். தொடர்ந்து மற்றொருவர் கையில் பெரிய தங்க நிறம் கொண்ட வாள் ஒன்றை பரிசாக கொடுத்தார்.
அதனை பார்த்தவுடனே, கடுப்பான கமல்ஹாசன் முதலில் வாள் ஏதும் வேண்டாம் பா என்பது போல கூறினார். ஆனால், அந்த நபர் விடாமல் வாளை பிடிங்க பிடிங்க என கூறினார்.
ஒரு கட்டத்தில் மிகவும் கடுப்பான கமல்ஹாசன் கீழே வையுங்கள் என கடும் கோபத்துடன் கூறினார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.