கமலும் சீமானும் சேர்ந்தால் அரசியலில் டாப்ல இருக்கலாம் - கருணாஸ்
kamal
seeman
karunas
By Irumporai
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையிலிள்ள அவரது அலுவலகத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் இன்று சந்தித்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், கமல்கோவை தெற்கு தொகுதியில் தோல்வியுற்றது தமிழ் மக்களுக்கு கவலையை தந்துள்ளது.
பணம் கொடுக்காமல் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றவர் கமல்ஹாசன். ஆகவே கமல்ஹாசனும் சீமானும் கூட்டணி வைத்தால் அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுக்கலாம் என கூறினார்.
மேலும், வரக்கூடிய காலத்தில் யார் மக்களின் நலனுக்காக பாடுபடுவார்களோ அவர்களுடன் இணைந்து செயல்படுவோம். என கூறினார்