கள்ளக்குறிச்சி கலவர வழக்கு - மேலும் 4 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

Tamil nadu Kallakurichi School Death Kallakurichi
By Thahir Sep 27, 2022 01:00 PM GMT
Report

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

4 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

இந்த கலவரத்தின் போது பள்ளியில் இருந்த பொருட்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது. இச்சம்பவம் பற்றி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு - மேலும் 4 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் | Kallakurichi Riots Case 4 More Under Gangster Law

இதில் சம்மந்தபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த கலவரத்தில் தொடர்புடைய 350க்கும் மேற்பட்டோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கலவர வழக்கில் மேலும் 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஜாபர் அலி, விஜய், ராமலிங்கம், ஜெயவேல் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.