கள்ளக்குறிச்சி கலவரம் ; பள்ளி ஆசிரியர்கள் இருவர் கைது..!

Tamil nadu Tamil Nadu Police Kallakurichi School Death Kallakurichi
By Thahir Jul 18, 2022 03:36 AM GMT
Report

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பயின்ற மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளி விவகாரம் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை கண்டித்து நேற்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி கலவரம் ; பள்ளி ஆசிரியர்கள் இருவர் கைது..! | Kallakurichi Riot Two School Teachers Arrested

ஆசிரியர்கள் 2 பேர் கைது 

பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள். பள்ளியின் நுழைவு வாயில் கேட்டை உடைத்த அவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வந்து சாலையில் போட்டு தீவைத்து எரித்தனர்.

கள்ளக்குறிச்சி கலவரம் ; பள்ளி ஆசிரியர்கள் இருவர் கைது..! | Kallakurichi Riot Two School Teachers Arrested

இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர்,செயலாளர் மற்றும் தாளாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது வேதியியல் மற்றும் கணித ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.