கள்ளக்குறிச்சி கலவரம்; தாக்குதலுக்கு உள்ளான பள்ளியின் சேத விவரங்கள் வெளியானது..!
கள்ளக்குறிச்சி கலவரத்தில் போராட்டக்காரர்களாக தாக்கப்பட்ட பள்ளியின் சேத விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி கலவரம்
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்திற்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராடட்டம் கலவரமாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்பட 58 போலீசார் காயமடைந்தனர்.
கலவரத்தின் போது பள்ளியின் உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் சொத்துக்களை அடித்து நொறுக்கினர். இதில் பள்ளி முழுவதும் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது.
இந்த கலவரம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவேற்றி வருகின்றனர்.
சேத விவரங்கள் வெளியீடு
பள்ளியின் உள்ளே நுழைந்து தாக்கிய போராட்டாக்காரர்கள் பள்ளியை முழுவதுமாக சூறையாடினர். இதில் பள்ளியின் 21 பேருந்துகள், 1 ஜேசிபி 2 டிராக்டர்கள், 2 டிப்பர் லாரிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியில் இருந்த மேஜைகள் மற்றும் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை துாக்கி சென்றதாக கூறப்படுகிறது.