அனுமதியின்றி இயங்கிய கள்ளக்குறிச்சி பள்ளி விடுதி : மாநில குழந்தைகள் நல ஆணையர் தகவல்

Kallakurichi School Death Kallakurichi
By Irumporai Jul 21, 2022 10:12 AM GMT
Report

அனுமதி பெறாமல் விடுதி நடத்தியது தண்டனைக்குரிய குற்றம் என்று மாநில குழந்தைகள் நல ஆணையர் கூறியுள்ளார்.

விடுதி அனுமதியின்றி இயங்கியுள்ளது

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி அனுமதியின்றி இயங்கியுள்ளது என்று மாநில குழந்தைகள் ஆணையர் நல சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி இயங்கிய கள்ளக்குறிச்சி பள்ளி விடுதி :  மாநில குழந்தைகள் நல ஆணையர் தகவல் | Kallakurichi Chinnasalem Student Suicide Issue

கடந்த 13ம் தேதி மாணவி இறந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் மாநில குழந்தைகள் நல ஆணையர் இன்று விசாரணை மேற்கொண்டார்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி அனுமதி பெறாமல் இயங்கியுள்ளது. முறையான அனுமதி பெறாத விடுதியில் 24 பெண் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெயரை பயன்படுத்தக்கூடாது 

அனுமதியின்றி பள்ளி விடுதி இயங்கியது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம். அனுமதி பெறாமல் விடுதி நடத்தியது தண்டனைக்குரிய குற்றம் என கூறினார்.

அனுமதியின்றி இயங்கிய கள்ளக்குறிச்சி பள்ளி விடுதி :  மாநில குழந்தைகள் நல ஆணையர் தகவல் | Kallakurichi Chinnasalem Student Suicide Issue

மேலும், முறையாக விதிகள் கடைபிடித்திருந்தால் மாணவிக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும். எந்த வழக்காக இருந்தாலும், சிறார்களின் புகைப்படம், பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்தார்.