கட்சியையும் ஆட்சியையும் என் தோளில் சுமந்து கொண்டிருக்கிறேன் : முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.
கலைஞர் நினைவு தினம்
பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். மேலும் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் :
தனிநிகர் தலைவரே
மூத்த தமிழினத்தின் முத்தான தனிநிகர் தலைவரே! உங்கள் நினைவுநாள் இன்று. உங்களை நாங்கள் மறந்த நாள் என்று? நிழலாய் இருந்து வழிநடத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்ற மனத்துணிச்சலோடுதான் கட்சியையும் ஆட்சியையும் என் தோளில் சுமந்து கொண்டிருக்கிறேன்.
மூத்த தமிழினத்தின் முத்தான தனிநிகர் தலைவரே!
— M.K.Stalin (@mkstalin) August 7, 2022
உங்கள் நினைவுநாள் இன்று. உங்களை நாங்கள் மறந்த நாள் என்று?
நிழலாய் இருந்து வழிநடத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்ற மனத்துணிச்சலோடுதான் கட்சியையும் ஆட்சியையும் என் தோளில் சுமந்து கொண்டிருக்கிறேன்.#ForeverKalaignar (1/2) pic.twitter.com/LFw8cu8YBl
உங்கள் விழியின் ஒளியில் பயணத்தைத் தொடர்கிறோம். உங்கள் வழியில் எங்கள் கால்கள் செல்கின்றன. 'உடன்பிறப்பே' என்ற உயிர்ச்சொல்லில் நாங்கள் உயிர் வாழ்கிறோம். கலைஞரே வாழ்க! தலைவரே வாழ்த்துக!" என்று பதிவிட்டுள்ளார்.