திருச்சி சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருது - நித்தியானந்தா அறிவிப்பு

DMK BJP Nithyananda Tiruchirappalli
By Thahir Oct 06, 2022 10:35 AM GMT
Report

திருச்சி சூர்யா சிவாக்கு கைலாசா தர்மரட்சகர் விருது அறிவித்துள்ளார் நித்தியானந்தா.

விருது அறிவித்த நித்தியானந்தா 

கைலாசா நாட்டின் அதிபர் என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்டு அந்த நாட்டுக்கென்று நாணயம், விசா என உருவாக்கியுள்ளார்.

அண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு நித்யானந்தா உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்து அவர் தனது முகநுால் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார்.

நீண்ட காலமாக தனது உருவத்தை காட்டாமல் இருந்த நித்யானந்தா திடீரென பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருது கொடுத்துள்ளதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

திருச்சி சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருது - நித்தியானந்தா அறிவிப்பு | Kailasa Dharmaratshakhar Award To Surya Siva

திமுக மாநிலங்களவை எம்பியும், கொள்ளை பரப்பு செயலாளருமான திருச்சி சிவாவின் மகனான சூர்யா சிவா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

பின்னர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் திருச்சி சூர்யா சிவாக்கு கைலாசா தர்மரட்சகர் விருது வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திருச்சி சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருது - நித்தியானந்தா அறிவிப்பு | Kailasa Dharmaratshakhar Award To Surya Siva

இது தொடர்பான வீடியோவை சூர்யா சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் திடீரென தோன்றிய நித்தியானந்தா சூர்யா சிவாவிற்கு கைலாசா தர்மரட்சகர் விருது வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதில் நன்றியுரை தெரிவிக்கும் சூர்யா, தான் திருவண்ணாமலையாரின் பக்தர் என்றும் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து விருது கிடைத்தது தான் பாக்கியமாக நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.