அரசியலும் ஒரு வட்டம் தான்.. விஜய் ஸ்டைலில் எச்சரித்த கடம்பூர் ராஜூ!

kadamburraju poltics
By Irumporai Jun 16, 2021 12:15 PM GMT
Report

அரசியல் என்பது ஒரு வட்டம் தான் அது சுற்றி வரும். அதிமுகவுக்கு யாராலும் சாதி சாயம் பூச முடியாது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்படியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது சட்டப்பேரவை எதிர்க்கட்சி பொருளாளராக தன்னை தேர்ந்தெடுத்தது கோவில்பட்டி தொகுதியில் தான் பெற்ற வெற்றிக்கு அதிமுக அளித்துள்ள அங்கீகாரமாகக் கருதுவதாக கூறினார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை இரு அமைச்சர்கள் உள்ளனர். அதில் ஒருவரான அனிதா ராதாகிருஷ்ணன் தனது அமைச்சர் பதவிக்குண்டான வேலையில் ஈடுபடாமல் ஆடுபுலி ஆட்டம் ஆடி, கட்சிக்காரர்களை விலைக்கு வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளாதாக குற்றம் சாட்டினார்.

தொடந்து பேசிய அமைச்சர் ஆட்சிக்கு வந்த ஒரு மாதமாகவில்லை. நாங்களும் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தோம்.

மக்கள் தீர்ப்பின்படி யார் எந்த பொறுப்பில் இருந்தார்களோ அந்த பொறுப்பிலேயே இருந்து பணிகளை செய்ய வேண்டும் என்ற பண்பாட்டோடு இருந்தோம். 

இதனை மக்கள் கவனித்துக் கொண்டு தான் உள்ளனர். அரசியல் என்பது ஒரு வட்டம் தான். அது சுற்றி வரும். அதிமுகவுக்கு யாராலும் சாதி சாயம் பூச முடியாது. இதனை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார்.