கபடி.. கபடி.. கபடி.. - பாகிஸ்தான் வீரரை கலாய்த்த இந்திய வீரர் ஷிகர் தவான்!
பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை கலாய்த்து பதிவிட்டுள்ளார் இந்திய வீரர் ஷிகர் தவான்.
சுவாரஸ்ய நிகழ்வு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் 3வது டி20 போட்டியின்போது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்தது. பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் பந்தை அடித்து விட்டு பேட்டை தவறவிட்டு வெறுங்கையுடன் ஓடி கிரீஸை தொட்டு 2 ரன்கள் எடுத்தார்.
கலாய்த்த தவான்
ஆனால் அவர் சரியாக கிரீஸ் கோட்டை தொடவில்லை என தெரியவந்ததும், ஷார்ட் ரன் முறையில் ஒரு ரன் குறைக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் இந்த புகைப்படத்தை இந்திய வீரர் ஷிகர் தவான், தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . அதில் 'கபடி கபடி கபடி' என்ற தலைப்புடன் ரிஸ்வானை கலாய்த்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.