திடீரென ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலிலிருந்து விலகும் முல்லை - மீண்டும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Serials
By Nandhini Sep 05, 2022 08:00 AM GMT
Report

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலிலிருந்து முல்லை விலகப்போவதாக வெளியான தகவலால் ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் - முல்லை

பிரபல விஜய் டிவியில் அண்ணன்- தம்பி பாசத்தை மையமாக வைத்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்ததொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இத்தொடரில் கதிர் - முல்லை கேரக்டருக்குதான் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். முல்லையாக முதலில் வி.ஜே. சித்ரா தான் நடித்து வந்தார். இவர் ‘கால்ஸ்’ படத்தில் ஹீரோயினாக நடித்து வந்தநிலையில், படம் ரிலீஸாகும் முன்பே விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, வி.ஜே.சித்ரா முல்லையாக நடிக்கும் கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், முல்லையாக நடிக்க காவ்யா அறிவுமணியை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பட குழுவினர் தேர்வு செய்தனர். இதனையடுத்து, கதிருக்கு முல்லையாக நடித்து வருகிறார் காவ்யா.

Kaavya Arivumani

காவ்யா விலகல்

இந்நிலையில், முல்லையாக நடித்து வரும் காவ்யா சீரியலிலிருந்து விலகுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களிடையே பெரும் சோகமும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய சமூகவலைத்தளங்களில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தை காவ்யா பதிவிட்டு மிஸ் யூ ஆல் என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

Kaavya Arivumani

‘பிக்பாஸ் சீசன் 6’ நடிகை காவ்யா கலந்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன. பிக்பாஸில் கலந்து கொள்ளப்போகும் காரணத்தினால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலிலிருந்து காவ்யா விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.