என்ன அவசரம் நண்பா... - பாடகர் கே.கே. மறைவிற்கு ஏ.ஆர்.ரகுமான் உருக்கமான பதிவு
நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல பாடகர் கேகே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
52 வயதான பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் என்ற கேகே தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.
இவர் தமிழில் கில்லி,தாமிரபரணி,ஆடுகளம்,ஐயா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் பாடியுள்ளார். நேற்று இவர் கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடல்களை பாடினார்.
அதன் பின்னர் அவர்,தங்கியிருந்த ஹோட்டலின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறினர்.
இவருடைய மரணச் செய்தியைக் கேட்டு ரசிகர்களும், சினிமாத்துறையும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல பாடகர் கே.கே. மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது பதிவில், அன்புள்ள கேகே, என்ன அவசரம் நண்பா, உங்களைப் போன்ற திறமையான பாடகர்களால் தான் வாழ்க்கை இனிமையாகிறது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.