தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? எப்போது அறிவிப்பு வெளியாகும்?
தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவியது.
இந்த தாக்கம் படிப்படியாக குறைந்து வந்ததில், தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்பட்டும் என பொதுமக்கள் மத்தியில் தொடர் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
தெலுங்கானாவில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதை பிற மாநிலங்களும் பின் தொடர வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் நேற்று முன் தினம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.
இன்னும் சில தினங்களில் பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதனால் வரும் ஜூலை மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில்
வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.