நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க 3 கோடி நீதி ஒதுக்கீடு...முக ஸ்டாலின்

M K Stalin Tamil nadu Tamil
By Karthick Aug 28, 2023 12:30 PM GMT
Report

ஐகோர்ட் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டத்துறையிலும் கொள்கை வேண்டும்  

இரு மொழி கொள்கையை திராவிட அரசு மிகவும் தீவிரமாக கொண்டுள்ளது. குறிப்பாக தற்போது ஹிந்தி திணிப்பு மறைமுகமாக பல வகையில் இருக்கும் நிலையில், தமிழகத்தில் மொழி பற்றும், மொழி குறித்த பிரச்சாரங்களும் மீண்டும் வேகமெடுக்க துவங்கியுள்ளது.

judgement-to-be-translated-in-tamil-

நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டுவர வேண்டும் என பல முறை கோரிக்கைகள் வலுத்த வரும் நிலையில், தற்போது முதல்வர் முக ஸ்டாலின், மொழி கொள்கையில் தற்போது அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.   

தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படும்

அதாவது, சென்னை உயர்நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்க 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்திற்கு முதற்கட்டமாக 3 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

judgement-to-be-translated-in-tamil-

அனைத்து மக்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் சென்றடைய வேண்டும் என்ற காரணத்தாலும், உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க தேவைக்கேற்ப கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.