அதிமுக - பாஜக மோதல்.. இதெல்லாம் நமக்கு தேவையில்லை : கண்டீஷன் போட்ட ஜே.பி.நட்டா
தமிழகத்தில் அ .தி .மு .க.வுடன் சுமுக உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் யாரும் விமர்சித்து பேசக்கூடாது என பாஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டா அறிவுறுதியுள்ளார்.
அ .தி .மு .க - பா .ஜ .க மோதல்
கடந்த சில வாரங்களாக அதிமுக மற்றும் தமிழக பாஜக இடையே பனிப்போர் நிலவி வருகின்றது என்றே கூறலாம், தமிழக பா.ஜ க .வில் மாநில தகவல் தொழில்நுட்ப செயலராக இருந்த நிர்மல்குமார் சமீபத்தில் அ.தி .மு .க வில் இணைந்தார் .அவரை தொடர்ந்து பா.ஜ .க நிர்வாகிகள் சிலரும் அ .தி .மு .க. வில் இணைந்தார்கள் .

அண்ணாமலை விமர்சனம்
இதையடுத்து பா.ஜ .க . நிர்வாகிகளை வலுகட்டாயமாக அழைத்து கட்சி நடத்தும் நிலமை ஏற்பட்டுள்ளது என்று அக்கட்சி தலைவர் கே .அண்ணாமலை விமர்சித்தார் , மேலும் தான் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போல தலைவர் என்று கூறினார், அண்ணாமலையின் இந்த கருத்து அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் பா.ஜ .க தேசிய தலைவர் ஜே.பி .நட்டா கடந்த 10-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்சியில் பங்கேற்க வந்தார் அப்போது அவர் ,தமிழக பா.ஜ .க நிர்வகிகளுடன் தனியாக ஆலேசனை நடத்தினர்.
அடவைஸ் கொடுத்த நட்டா
அ .தி. மு .வுடன் நாம் சுமுக உறவை வைத்துக்கொள்ள வேண்டும், அ .தி .மு .க .தலைமை குறித்தோ ,தொண்டர்களை குறித்து யாரும் எந்தவித குறையும் சொல்ல வேண்டாம் ,இதனனை தமிழக பா.ஜ .க நிர்வகிகள் ,தொண்டர்கள் பின்பற்ற வேண்டும் எனக்கூறியுள்ளார் .இதனை யாரும் மீறி நடக்கக்கூடாது என அறிவுரை வழங்கியதாக கூறப்படுகின்றது.
அ .தி. மு .வுடன் நாம் சுமுக உறவை வைத்துக்கொள்ள வேண்டும், அ .தி .மு .க .தலைமை குறித்தோ ,தொண்டர்களை குறித்து யாரும் எந்தவித குறையும் சொல்ல வேண்டாம் ,இதனனை தமிழக பா.ஜ .க நிர்வகிகள் ,தொண்டர்கள் பின்பற்ற வேண்டும் எனக்கூறியுள்ளார் .இதனை யாரும் மீறி நடக்கக்கூடாது