வெறும் ரூ.500,700க்கு அசத்தலான ஸ்மார்ட்போன் - எதிர்ப்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்

Petchi Avudaiappan
in தொழில்நுட்பம்Report this article
ஜியோ நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பான நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் 2 வகைகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மொபைல் சந்தையில் முன்னணியில் உள்ள முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் நடந்த ரிலையன்ஸ் ஏஜிஎம் மாநாட்டில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்ப்போனை அறிமுகம் செய்தது.
இதனிடையே அந்த ஸ்மார்ட்போனானது இரண்டு மாடல்களில் கிடைக்கும் என்றும், ஒன்று ஜியோ போன் நெக்ஸ்ட் பேசிக் மாடல், மற்றொன்று ஜியோபோன் நெக்ஸ்ட் அட்வான்ஸ் மாடல் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,000 மற்றும் ரூ.7,000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வாடிக்கையாளர்கள் 10 சதவிகிதத்தை மட்டுமே செலுத்தி வாங்கலாம் என்றும், மீதமுள்ள பணத்தை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான இஎம்ஐ மூலம் செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.