நேற்று முளைத்த காளான் உதயநிதிக்கு வாய் துடுக்கு அதிகம்; வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது - ஜெயக்குமார்!
உதயநிதி ஸ்டாலின் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "உங்க அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம்? தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்துதானே பேரிடர் நிதி கேட்கிறோம் என மத்திய அரசை காட்டமாக பேசியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டெல்லியில் பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் உதயநிதியை கடுமையாக விமர்சித்தார். அவருடைய பாஷை எப்போதும் அப்படிதான். இப்படியெல்லாம் பேசுறவங்க அவங்க அப்பன் வீட்டு சொத்தை வைத்தா இன்னிக்கு பதவியில் அனுபவிக்கிறாரா?-ன்னு சொல்ல முடியுமா? கேட்க முடியுமா? என்றார்.
ஜெயக்குமார்
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக பேசியதாவது "அமைச்சர் உதயநிதி நேற்று முளைத்த காளான். அவருக்கு வாய் துடுக்கு அதிகம்.
வாய் துடுக்கு அதிகம் என்பதால் வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது. ஒரு பொறுப்பா கருத்துகளை சொல்ல வேண்டும். அந்த பக்குவம் இல்லாத அரசியல்வாதி உதயநிதி. வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்டார் உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்த உடன் பல்டி அடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.