ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டை தொடர்ந்து விஜய் வீட்டில் நகைகள் கொள்ளை - வெளியான அதிர்ச்சி தகவல்

Rajinikanth Aishwarya Rajinikanth Chennai Tamil Nadu Police
By Thahir Apr 01, 2023 06:57 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் நகைகள் கொள்ளை போன நிலையில், விஜய் யேசுதாசின் வீட்டில் 60 சவரன் நகை திருட்டு போகியிருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீ்ட்டில் நகை கொள்ளை 

அண்மையில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா வீட்டில் இருந்த 60 சவரன் நகைகள் கொள்ளை போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. போலீசாரின் விசாரணையில் ஐஸ்வர்யாவின் வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்காரி மற்றும் கார் டிரைவரும் நகைகளை திருடியது தெரியவந்தது.

Jewelery robbery at Vijay Yosudas house

இதை தொடர்ந்து 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து ஐஸ்வர்யாவிடம் போலீசார் கேட்டபோது அவர் தனக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட நகைகளாக இருக்கலாம் என பதில் அளித்துள்ளார்.

இந்த நிலையில் வேலைக்காரி விசாரணையின் போது ஐஸ்வர்யாவின் பினாமி நான் தான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் மேலும் கணக்கில் வராத நடிகைகள் மற்றும் சொத்துக்கள் எவ்வளவு உள்ளது என்று வருமான வரித்துறை சோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருட்டு 

இந்த நிலையில், பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போய் இருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jewelery robbery at Vijay Yosudas house

சென்னை அபிராமபுரத்தில் உள்ள பாடகர் விஜய் யேசுதாசின் வீட்டில் 60 சவரன் தங்க நகை திருட்டு என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.