ஜெயலலிதாவின் மரண நேரம் - ட்ரெண்டாகும் ‘டிசம்பர் 5’ மருத்துவ அறிக்கை - ஷாக்கான மக்கள்
ஜெயலலிதாவின் மரண நேர மருத்துவ அறிக்கை தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் -
சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை.
அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார்; ஆனால் அது நடக்கவில்லை.
2012ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா இட்லி, தயிர்சாதம், வெண்பொங்கல், ஓட்ஸ், தக்காளி சாதம், சீத்தாப்பழம், திராட்சை உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டார் என்று ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டாகும் ‘டிசம்பர் 5’
இந்நிலையில், ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மாலை 3.50 மணி அளவில் மரணம் அடைந்ததாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், சமூகவலைத்தளங்களில் 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வெளியான மருத்துவ அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது.