உயிரிழக்கும் முன் இரும்மி கொண்டே பேசிய ஜெயலலிதா - வெளியான ஆடியோ
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழக்கும் முன் இரும்பி கொண்டே மருத்துவரிடம் பேசும் ஆடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
ஜெயலலிதா உயிரிழப்பு
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் நவம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க அமைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் விரிவான அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்தது.
இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த அறிக்கையானது தாக்கல் செய்யப்பட்டது.
வெளியான ஆடியோ
அந்த அறிக்கையில் சசிகலா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் குற்றவாளிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஜெயலலிதா இறப்பதற்கு முன் மருத்துவர் சிவக்குமாரிடம் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில் ஜெயலலிதா இரும்பி கொண்டே ஒன்னு கிடக்க ஒன்னு செய்ய வேண்டாம் என்று இரும்பி கொண்டே சொல்கிறார்.