ஜெயலலிதா மரணம் : விசாரணை வளையத்தில் முதன் முறையாக இளவரசி ஆஜர்

ஜெயலலிதா மரணம் jayalalitha-death apollo hospital Ilavarasi Azhar இளவரசி ஆஜர்
By Nandhini Mar 21, 2022 05:36 AM GMT
Report

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

ஜெயலலிதாவோடு தொடர்புடையவர்கள், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உள்ளிட்ட பலரிடம் பல்வேறு கட்ட விசாரணை நடந்துள்ளது.

2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறுமுகசாமியின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அதன்பின்னர் மீண்டும் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்ததையடுத்து, 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு விசாரணை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இதற்கிடையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மார்ச் 21ம் தேதி (இன்று) நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. சசிகலாவின் உறவினர் இளவரசியும் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முதல்முறையாக சசிகலாவின் சகோதரர் மனைவி இளவரசி ஆஜராகியுள்ளார்.   

ஜெயலலிதா மரணம் : விசாரணை வளையத்தில் முதன் முறையாக இளவரசி ஆஜர் | Jayalalitha Death Apollo Ilavarasi Azhar