கச்சத்தீவு விவகாரம்: 10 வருஷமா வாயை திறக்காம.. இப்போ மட்டும்? கொதித்த ஜெயக்குமார்!

ADMK DMK BJP D. Jayakumar
By Sumathi Apr 01, 2024 12:44 PM GMT
Report

கச்சத்தீவு விவகாரம் குறித்து ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரம்

வட சென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம் மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

கச்சத்தீவு விவகாரம்: 10 வருஷமா வாயை திறக்காம.. இப்போ மட்டும்? கொதித்த ஜெயக்குமார்! | Jayakumar Slams Dmk And Modi Katchatheevu Issue

வட சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினரை யாரும் பார்த்ததுக்கூட கிடையாது. திமுக வாக்கு சேகரிக்க செல்லும் இடத்தில் எல்லாம் மக்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பால்விலை, மின்சார கட்டணம் உயர்வு,சொத்துவரி உள்ளிட்ட அனைத்திலும் விலையை உயர்ந்துள்ளதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும் : கொந்தளித்த ஜெயக்குமார்

அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும் : கொந்தளித்த ஜெயக்குமார்


கொந்தளித்த ஜெயக்குமார்

அத்தியாவசிய விலை அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்த்து காங்கிரஸ் கொடுக்கும் போது , சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து அப்போது ஆட்சியில் இருந்த திமுக அதை கண்டிக்காமல் அமைதியாக இருந்தது.

கச்சத்தீவு விவகாரம்: 10 வருஷமா வாயை திறக்காம.. இப்போ மட்டும்? கொதித்த ஜெயக்குமார்! | Jayakumar Slams Dmk And Modi Katchatheevu Issue

மத்திய அரசில் அங்கம் வகித்த போதும், கச்சத்தீவை மீட்க வாய்ப்பிருந்தும் திமுக அதனை செய்யவில்லை. தற்போதும் கச்சத்தீவை மீட்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பது போலியான வாக்குறுதி. மக்கள் இனியும் திமுகவை நம்ப தயாராக இல்லை.

10 ஆண்டுகளாக பிரதமராக உள்ள மோடி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட போது ஒருமுறை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. பிரதமர் 10 ஆண்டுகளாக வாய் திறக்காமல் தற்போது தேர்தலுக்காக கட்சத்தீவு குறித்து பேசுவதாக விமர்சித்துள்ளார்.