அரசியல் காழ்ப்புணர்ச்சி...அதான் இப்படி பண்றாங்க...திமுகவை விளாசிய ஜெயக்குமார்

ADMK DMK D. Jayakumar
By Karthick Aug 16, 2023 02:46 PM GMT
Report

வரும் 20-ஆம் தேதி நீட் தேர்வை எதிர்த்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது அரசியல் காழ்புணர்ச்சியால் நடத்தப்படுகிறது என ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக போராட்டம்  

நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக மாணவரணி, மருத்துவரணி, இளைஞரணி ஆகியவற்றின் சார்பில் கண்டன உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டது.

jayakumar-slams-dmk-

இதற்கு அறிவிப்பிற்கு பிறகு அதிமுக தரப்பில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. காரணம் அன்று தான் அதிமுகவின் மாநில மாநாடும் நடைபெறவுள்ளது.

ஜெயக்குமார் விளாசல்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து பேசும் போது, நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என குறிப்பிட்டு, நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உரிமையில்லை என கூறி, அதனை திசை திருப்பவே ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக புறக்கணித்தது என குற்றம்சாட்டினார்.

jayakumar-slams-dmk-

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக நடத்தும் மாநாடு வெளியில் தெரியக்கூடாது என்பதற்காகவே, காழ்புணர்ச்சியின் காரணமாக திமுக 20-ஆம் தேதி போராட்டம் நடத்துகிறது என சுட்டிக்காட்டிய ஜெயக்குமார், திமுகவை அதிமுக தூங்கவிடாமல் செய்கிறது என்பதற்கு இந்த போராட்டமே ஒரு உதாரணம் என தெரிவித்தார்.