பத்துக் கட்சி பண்ருட்டி அம்மாவை விமர்சிக்கலாமா..? கடுப்பான ஜெயக்குமார்!!
ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்பது உண்மைதான் என கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் அணியின் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பண்ருட்டி ராமசந்திரன் கருத்து
பாஜக அதிமுக கூட்டணி முறிவு குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அணியின் பண்ருட்டி ராமசந்திரனிடம் ஜெயலலிதா பற்றி அண்ணாமலையின் கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, "அது உண்மை தான் என தெரிவித்து, அவர் முதலமைச்சராக இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார்கள் என்பதும் உண்மை தான் சர்சையைக்குறிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இது கடவுளையே குறை சொல்லும் நாடு என சுட்டிக்காட்டி, அவர் ஊழல் குற்றவாளி என்பதை நீங்கள் ஏற்கவில்லை, நாங்கள் ஏற்கவில்லை என்பது இல்லை - ஆனால், அது உண்மையே என்றார். இந்த கருத்துக்கள் அதிமுகவினரிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஜெயக்குமார் விமர்சனம்
இது குறித்து தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்துக்கட்சி பண்ருட்டி அம்மா குறித்து அண்ணாமலை பேசிய கருத்தை 'It is a fact' என சொல்கிறார். அடுத்தவர் பேச அமைதி காத்தார்.அருகில் இருப்பவரை பேசவும் அனுமதிக்கிறார் இந்த நடிப்பின் நாயகன். தாயை பழிப்பதை மகிழ்வோடு தாலாட்டு கேட்பதை போல கேட்கும் சுயநலவாதி பன்னீர்செல்வம் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் வரும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிரடியாக தெரிவித்த நிலையில், நேற்று ஓபிஎஸ் அணியினர் தங்களும் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கடந்த 3 மாதங்களாக பாஜகவுடன் ட்டொர்ப்பில் இருந்து வருவதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்துக்கட்சி பண்ருட்டி அம்மா குறித்து அண்ணாமலை பேசிய கருத்தை 'It is a fact' என சொல்கிறார்.
— DJayakumar (@offiofDJ) September 28, 2023
அடுத்தவர் பேச அமைதி காத்தார்.
அருகில் இருப்பவரை பேசவும் அனுமதிக்கிறார் இந்த நடிப்பின் நாயகன்.
தாயை பழிப்பதை மகிழ்வோடு தாலாட்டு கேட்பதை போல கேட்கும் சுயநலவாதி பன்னீர்செல்வம். pic.twitter.com/dH4hcOUGMN