டிடிவி தினகரன், சசிகலா இவர்கள் தமிழகத்தால் ஒதுக்கப்பட்ட சக்திகள் : ஜெயக்குமார் பரபரப்பு

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Jul 05, 2022 06:51 AM GMT
Report

பொதுக்குழு உறுப்பினர்களை அவமானப்படுத்தும் வகையில் மருது அழகுராஜ் செயல்பட்டு வருகிறார் என்று சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

கொந்தளித்த ஜெயக்குமார்

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபடுகிறார். ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சாய்ந்துள்ளார் 'நமது அம்மா' நாளிதழ் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் என குற்றம் சாட்டினார்.

டிடிவி தினகரன், சசிகலா  இவர்கள் தமிழகத்தால் ஒதுக்கப்பட்ட சக்திகள் : ஜெயக்குமார் பரபரப்பு | Jayakumar Sensational Allegation

நமது அம்மா நாளிதழில் முறைகேடு செய்ததால் ஒதுக்கி வைக்கப்பட்டவர் தான் மருது அழகுராஜ். பொதுக்குழு உறுப்பினர்களை கொச்சைப்படுத்தி பேசியதால் தொண்டர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

ஒதுக்கப்பட்ட சக்திகள் சசிகலா

ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து கொண்டு மருது அழகுராஜ் கூலிக்கு வேலை செய்து வருகிறார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஓ.பி.எஸ் ஈடுபடுவது சரியல்ல. கொடநாடு சம்பவம் குறித்து மருது அழகுராஜ் உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைந்து செயல்பட்டார். எடப்பாடி பழனிசாமி நடவடிக்கையால் குற்றவாளிகள் பிடிபட்ட நிலையில் அவர்களை திமுகவினர் தான் ஜாமீனில் எடுத்ததாக குற்றம் சாட்டியுள்ள ஜெயக்குமார். டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களால் விலக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சக்திகள் என்றார்.  

அன்புள்ள அண்ணா.. நீங்கள் ஒருங்கிணைப்பாளரே கிடையாது : ஓபிஎஸ்க்கு இபிஎஸ் பதில் கடிதம்