எருமை மாடு திராவிடர்களா ? சீமானின் பேச்சுக்கு கொந்தளித்த ஜெயக்குமார்
கருப்பாக இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்றால் ,கருப்பாக இருக்கும் எருமை திராவிடர்களா என சீமான் விமர்சித்தற்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,திராவிடர்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது கருப்பாக இருப்பவர்கள் திராவிடர்கள் என்றால் , கருப்பாக உள்ள எருமை மாடும் திராவிடர் தான் என்று பதில் கூறினர். இந்த நிலையில் சீமானின் இந்த பேச்சுக்கு பதில் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் :
திராவிடர்களை ஒட்டு மொத்தமாக எருமை மாடுடன் ஒப்பிடு சீமான் பேசியது கண்டிக்கதக்கது,
ஒட்டு மொத்த திராவிடர்களையும் கொச்சைபடுத்தும் வகையில் அவரது கருத்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.