நடிகர் 'அஜித்' அன்றே பேசினாரே; திரைத்துறையில் திமுக அரசு சர்வாதிகாரம் செய்கிறது - ஜெயக்குமார் பேச்சு!

Tamil Cinema DMK D. Jayakumar Tamil Actors
By Jiyath Oct 17, 2023 11:06 AM GMT
Report

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.

ஜெயக்குமார்

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது "தமிழகத்தில் ஆட்சியா நடக்கிறது இப்போது? இணைக்கு ஆட்சி ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை.

நடிகர்

ஆளுங்கட்சி சார்ந்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும், பத்திரிகை துறைக்கும் என யாருக்குமே பாதுகாப்பில்லாத ஒரு பொம்மை அரசாங்கம் இந்த தமிழ்நாட்டை ஆள்கிறது என்றால், அது விடியா திமுக அரசுதான் என்று ஜெயக்குமார் பேசியுள்ளார்.

மேலும் அவரிடம் லியோ திரைப்பட வெளியீட்டு விவகாரம் குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது "எங்கள் ஆட்சிக்காலத்தில் திரைத்துறை சுதந்திரமாக செயல்பட்டது. அன்றைக்கு நடிகர் விஜய் எடப்பாடியாரை சந்தித்தார், அவரின் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

பேட்டி

ரெட் ஜெயண்ட் மூவீஸுக்கு திரைப்படத்தை கொடுக்காவிட்டால் தொல்லைகளையும், பிரச்சனைகளையும் கொடுக்கும் வகையில் தான் இந்த விடியா திமுக அரசு செயலாற்றி வருகிறது. நீங்கள் எடுக்கும் படத்தை அடிமாட்டு விலைக்கு ரெட்ஜெயண்ட் மூவிஸுக்கு கொடுத்தால்தான் உங்களுக்கு எல்லா அனுமதியும் கொடுப்பார்கள்.

நடிகர்

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்று அவர்கள் கட்சி சார்பிலேயே கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவுக்கு வந்த அன்பு சகோதரர் நடிகர் அஜித் "நான் அழைத்து வரப்படவில்லை, இழுத்து வரப்பட்டேன்.

என்னை வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருக்கிறார்கள்" என்று பேசினார். அப்படி இன்றைக்கு திரைப்பட கலைஞர்களை பயமுறுத்தி, அச்சுறுத்தி திரைப்படம் எடுக்க விடாமல் செய்து திரைத்துறையில் ஒரு சர்வாதிகாரம் கோலோச்சப்படுகிறது என்றால் அது இந்த விடியா திமுக ஆட்சிதான்" என்று ஜெயக்குமார் பேசியுள்ளார்.