உனக்கு புரியாதா.. ஃபோட்டோ எடுத்தவரால் கடுப்பான அமிதாப் பச்சன் மனைவி - வைரல் வீடியோ
நடிகர் அமிதாப் பச்சன் மனைவி தன்னை வீடியோ எடுத்த நபர் மீது கடுமையாக நடந்துக்கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
ஜெயா பச்சன்
பழம்பெரும் நடிகை மற்றும் அரசியல்வாதி ஜெயா பச்சன். இவரது கணவரான நடிகர் அமிதாப் பச்சனுடன் இந்தூர் விமான நிலையத்திற்கு வந்தார்.இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில், ஜெயா அமிதாப் பச்சனுக்கு முன்னால் விமான நிலையத்தில் நடந்து செல்லும் போது பூங்கொத்துகளுடன் வந்த ஒரு நபரை அவர் சந்தித்தார், அப்போது ஒரு ரசிகர் தனது வீடியோவை பதிவு செய்வதை அவர் கவனித்தார்.
வைரல் வீடியோ
இதனால், அவர் கோபமடைந்து அந்த நபரிடம், “தயவுசெய்து எனது படங்களை கிளிக் செய்ய வேண்டாம். உனக்கு ஆங்கிலம் புரியவில்லையா? என கோபமுடன் கூறினார். ஜெயா பச்சன் எப்போதும் தனது படங்களை எடுப்பவர்களிடம் கடுமையாக நடந்துக்கொள்வார்
இதுகுறித்து முன்னதாக அவர், "நான் அதை வெறுக்கிறேன். உங்கள் தனிப்பட்ட வாழ்வில் தலையிட்டு அந்த பொருட்களை விற்று வயிற்றை நிரப்புபவர்களை நான் வெறுக்கிறேன்.
அப்படிப்பட்டவர்கள் மீது எனக்கு வெறுப்பு இருக்கிறது. நான் எப்போதும் அவர்களிடம், உங்களுக்கு வெட்கமாக இல்லையா என கேட்டத்துண்டு” எனக் கூறியுள்ளார்.