நேருவின் மனைவி.. பழங்குடியின பெண் 80 வயதில் மரணம் - யார் இவர்?

India
By Vinothini Nov 21, 2023 01:25 PM GMT
Report

பழங்குடியின பெண் மரணம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேருவின் மனைவி

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியினத்தை சேர்ந்தவர் புத்னி மஞ்சியன். 1959-ம் ஆண்டு இவருக்கு 16 வயது, அந்த சமயத்தில் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அணைக்கட்டு திட்டம் ஒன்றை தொடங்கி வைப்பதற்காக தன்பத் மாவட்டம் அருகே உள்ள பழங்குடியின பகுதிக்கு சென்றார்.

jawaharlal nehrus tribal wife

அப்போது நேரு பழங்குடியின மக்களை கவுரவிக்கும் விதமாக அங்கு நின்று கொண்டு இருந்த புத்னி மஞ்சியனுக்கு மாலை அணிவித்தார். அந்தபெண்ணின் சமூகத்தை சேர்ந்தவர்கள், பெண்ணுக்கு ஒரு ஆண் மாலை அணிவித்ததால் அதை திருமணாக கருதினர்.

இதனால், அந்த நிகழ்வுக்கு பிறகு, வேறு ஊர் ஆணை மணந்த பெண் என்று முத்திரை குத்தி, தங்கள் சமூகத்தில் இருந்து அந்த பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டனர்.

சுரங்கத்தில் சிக்கிய 41 பேர்.. வெளியான முதல் வீடியோ - என்ன நிலைமை?

சுரங்கத்தில் சிக்கிய 41 பேர்.. வெளியான முதல் வீடியோ - என்ன நிலைமை?

மரணம்

இந்நிலையில், மத்தியில் அவர் வேலை பார்த்து வந்த தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனிலும் இருந்து அவர் நீக்கப்பட்டார். பின்னர் ஜார்க்கண்டிற்கு குடி பெயர்ந்த புத்னி, சுதிர் தத்தா என்பரை மணந்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 1985-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் பகுதிக்கு சென்றார்.

jawaharlal nehrus tribal wife

அப்போது காங்கிரஸ் கட்சியினர் புத்னி மஞ்சியன் நிலையை எடுத்துக் கூறினர். பின்னர், மீண்டும் தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தில் வேலை வழங்கப்பட்டது. கடந்த 2005 ஆம் ஆண்டு பணியில் இருந்து புத்னி ஓய்வு பெற்றார். தற்போது 80- வயதான புத்னி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். புத்னி உடலுக்கு உள்ளூர் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அங்குள்ள பூங்காவில் அமைக்கப்பட்டு இருக்கும் நேருவின் சிலை அருகே நினைவிடம் ஒன்றையும் புத்னிக்கு அமைக்கப்பட வேண்டும் எனவும் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.