மிரட்டல் பந்துவீச்சால் ஸ்டெம்பை தெறிக்கவிட்ட பும்ராஹ் - மிரண்டு போன பேட்ஸ்மேன்

Bowling Jasprit Bumrah T20 World Cup
By Thahir Oct 19, 2021 07:10 AM GMT
Report

இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய பயிற்சி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

துபாய் ஐசிசி., மைதானத்தில் நடைபெற்று78 வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஜேசன் ராய் 17 ரன்களும், பட்லர் 18 ரன்களும் எடுத்து கொடுத்து விக்கெட்டை இழந்தனர்.

அடுத்ததாக வந்த டேவிட் மாலனும் 18 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்பின் வந்த பாரிஸ்டோ 49 ரன்கள் எடுத்த போது பும்ராஹ்வின் துல்லியமான பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்து வெளியேறினார்.

முக்கிய வீரரான லிவிங்ஸ்டோன் 30 ரன்களும், கடைசி நேரத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்து அதிரடியாக ரன் குவித்த மொய்ன் அலி 20 பந்துகளில் 43 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 188 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ராகுல் சாஹர் மற்றும் பும்ராஹ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதனையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.