ஐ.பி.எல். தொடரில் நேரடியாக களமிறங்குவார் ஜஸ்ப்ரித் பும்ரா - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
ஐ.பி.எல். தொடரில் நேரடியாக இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
பும்ரா விலகல்
காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விலகினார். இத்தகவலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது இந்திய கிரிக்கெட் அணியின் பின்னடைவாகவே பார்க்கப்பட்டு வந்தது.
களமிறங்குகிறார் ஜஸ்ப்ரித் பும்ரா
இந்நிலையில், நீண்ட நாட்களாக ஓய்வில் உள்ள ஜஸ்ப்ரித் பும்ரா, ஐ.பி.எல். தொடரில் நேரடியாக களமிறங்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாகவும், ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல் வரலாற்றின் சிறந்த பந்து வீச்சாளராகவும் இன்க்ரெடிபிள் விருதுகளை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பும்ரா ஐபிஎல் தொடரில் நேரடியாக களமிறங்க உள்ளதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.