தனிமையில் தவிப்பு - போலீஸ் எமெர்ஜென்சி எண்ணுக்கு 2,700 முறை கால் செய்த பெண்!

Japan
By Sumathi Jul 21, 2023 11:02 AM GMT
Report

 சுமார் 2.700 முறை பெண் ஒருவர் எமெர்ஜென்சி எண்ணுக்கு கால் செய்துள்ளார்.

தனிமை

ஜப்பான், மாட்சுடோவைச் சேர்ந்தவர் ஹிரோகோ ஹடகாமி. வேலையில்லாமல் தனிமையில் தவித்து வந்துள்ளார். இதனால் அவருக்கு யாரேனும் தன்னை கவனித்துக்கொள்ள வேண்டும் என எண்ணம் தோன்றியுள்ளது. எனவே, கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு அவசரக் காரணங்களைக் கூறி,

தனிமையில் தவிப்பு - போலீஸ் எமெர்ஜென்சி எண்ணுக்கு 2,700 முறை கால் செய்த பெண்! | Japanese Woman Made 2700 Fake Emergency Call

அவர் தனது வீட்டிலிருந்தும், அண்டை வீடுகளில் இருந்தும் பல முறை அழைப்புகளை மேற்கொண்டுள்ளார். மேலும், வயிற்று வலி, கால் வலி என பல்வேறு காரணங்களை சொல்லி ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களைக் கேட்டு வரிசையாக கால் செய்துள்ளார்.

எமெர்ஜென்சி கால்

தொடர்ந்து, அவசர நிலை என்று கருதி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பார்த்ததும், நான் யாருக்கும் கால் செய்ய வில்லை என கூறி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். அதன் வரிசையில், சுமார் 2,700 முறை கால் செய்துக் கொண்டிருந்த நிலையில் தான், இது தொடர்பாக போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

தனிமையில் தவிப்பு - போலீஸ் எமெர்ஜென்சி எண்ணுக்கு 2,700 முறை கால் செய்த பெண்! | Japanese Woman Made 2700 Fake Emergency Call

அதன் அடிப்படையில் அப்பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில், தான் பல ஆண்டுகளாக தனிமையில் இருக்கிறேன். இந்த நேரத்தில் தனக்கு போர் அடித்தால் கால் செய்வேன். நான் தனிமையில் இருக்கும் போது யாராவது நான் சொல்வதைக் கேட்டு எனக்கு உதவியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.