2 ஆண்டுகளாக தந்தையின் உடலை அலமாரியில் வைத்திருந்த நபர் - பகீர் பின்னணி
தந்தையின் உடல்
ஜப்பானில் உள்ள டோக்கியோவைச் சேர்ந்த 56 வயதான நோபுஹிகோ சுசுகி என்பவர், சீன உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த ஒரு வாரமாக இவர் உணவகத்தை திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுசுகியின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டு அலமாரியில், எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், வேலை முடிந்து திரும்பியபோது தனது 86 வயதான தந்தை வீட்டில் இறந்து கிடந்தார், ஆனால் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.
இறுதிச் சடங்குகள் செய்வதற்கு அதிகளவு செலவாகும் என்பதால், அதை தவிர்ப்பதற்காக தந்தையின் உடலை மறைத்து வைத்ததாகவும் தெரிவித்தார்.
இறுதிச்சடங்கு செலவு
ஆரம்பத்தில் இந்த செயல்களுக்காக அவர் குற்ற உணர்ச்சியுடன் இருந்ததாகவும், பின்னர், இந்த நிலைக்கு தனது தந்தையே காரணம் என்று நம்பி நிம்மதியடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
ஜப்பானில், இறுதிச்சடங்கு செய்வதற்கு 1.3 மில்லியன் யென்(இந்திய மதிப்பில் ரூ7.60 லட்சம்) ஆகும் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தந்தையின் அவர் தந்தையின் உடலை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
[KQOHKC
தற்போது, தனது தந்தையின் ஓய்வூதிய பணத்தை மோசடி செய்ததாக, அவரை காவல்துறையினர் கைது விசாரித்து வருகின்றனர்.
ஜப்பானில் இதே போல், 2023 ஆம் ஆண்டில், வேலையில்லாத 56 வயதான நபர் ஒருவர், 2019 முதல் 2022 வரை தனது 72 வயது தாயின் உடலை வீட்டில் மறைத்து வைத்திருந்து, அந்தக் காலகட்டத்தில் அவரது ஓய்வூதியத்திலிருந்து சுமார் இரண்டு மில்லியன் யென்களை பெற்று வந்தார்.