தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்த பவன் கல்யாணின் ஜன சேனா..!!
வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
ஆந்திர அரசியல்
தற்போது ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 175 இடஙக்ளில் 147 இடத்தை பிடித்து அக்கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு அம்மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக அம்மாநில கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றது. குறிப்பாக பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி இம்முறை தீவிரம் காட்டி வருகின்றது.
TDP'யுடன் கூட்டணி
சில தினங்கள் முன்பு, தெலுங்கு தேச கட்சியின் சந்திரபாபு நாயுடு கைதானது பெரும் பரபரப்பை அம்மாநில அரசியலில் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதிரடியான அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை எதிர்கொள்ள சந்திரபாபுவின் தெலுங்கு தேச கட்சியுடன் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமாக 175 சட்டமன்ற இடங்களும், 25 நாடாளுமன்ற இடங்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.