பாஜகவிற்கு அடுத்த அடி...கூட்டணியில் இருந்து வெளிவந்த பவன் கல்யாண்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி இருப்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல்
வரும் 2024-ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தல் மத்திய ஆளும் பாஜக அரசிற்கு பெரும் சவாலான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 10 ஆண்டு ஆட்சியை முடிக்கும் அக்கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள கடுமையான சவால்களை சந்தித்து வருகின்றது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாஜகவிற்கு எதிர்ப்பாக இருக்கும் கட்சிகளை காங்கிரஸ் கட்சி ஒன்றிணைத்து மாபெரும் இந்தியா கூட்டணியை உருவாகியுள்ளது.இந்நிலையில் தான் இரு கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாக பாஜகவின் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது.
வெளியேறிய ஜன சேனா
தென்னிந்தியாவில் பாஜகவிற்கு பெரிய ஆதரவு இல்லாத நிலையில், தற்போது மற்றொரு நெருக்கடியை அக்கட்சி சந்திக்கவுள்ளது. ஆந்திர மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி வெளியேறி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மாநில அரசியல் பெரும் சலசலப்புகளை சந்தித்து வரும் சூழலில் அக்கட்சி வெளியேறிருப்பது பாஜகவிற்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.