ஆஷஸ் டெஸ்ட் போட்டி : இங்கிலாந்து அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. புகழ்பெற்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தசைப்பிடிப்பு காரணமாக களமிறங்க மாட்டார் என இங்கிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.சிறிய அளவில் பாதிப்பு இருந்தாலும் 2ஆவது டெஸ்டுக்கு தயாராகவே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆஷஸ் என்பது இவ்விரு அணிகளுக்கு இடையே நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெறும் பாரம்பரியமிக்க உணர்வுபூர்வமான ஒரு தொடராகும். அதனால் எப்போதும் நீயா?, நானா? என இரு அணிகளும் ஆக்ரோஷமாக மல்லுக்கட்டுவார்கள். தற்போது இந்த கோப்பை ஆஸ்திரேலியா வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.