மக்கள் தான் ஜனநாயகத்தின் எஜமானர்கள் - நடிகர் சூர்யா ட்வீட்

Tweet Suriya Jai Bhim Farms Law
By Thahir Nov 20, 2021 09:36 AM GMT
Report

நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாகவும்,

இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்பி குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்,

கார்ப்பரேட்களின் பிடியில் இந்திய விவசாயம் சிக்கிக் கொள்ளும், ஆகவே அந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் ஒன்று சேர்ந்து பல மாதங்களாக இந்த போராட்டத்தை நடத்தி வந்தனர். பல்வேறு அடக்கு முறைகளையும் மீறி விவசாய பெருமக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். தமிழக முதலமைச்சர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "உழவே தலை" விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது.

ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது.

உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். முன்னதாக நேற்றைய தினம் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் அப்டேட்டை வெளியிட்டது படக்குழு.

பொங்கல் ரேஸில் களமிறங்கும் என எதிர்ப்பாரக்கப்பட்ட இந்தப்படம் பிப்ரவரி 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அண்மையில் ஓடிடி ரிலீசாக வெளியான 'ஜெய் பீம்' படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.