அஸ்வினுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் வெற்றி நிச்சயம்... முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கணிப்பு...
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறும் சுழற்பந்து வீச்சாளர் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 18 ஆம் தேதியில் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியா நியூஸ் அணிகள் மோதும் நிலையில் முன்னாள் வீரர்கள் பலரும் வெற்றி வாய்ப்பு குறித்தும், அணியில் இடம் பெறும் வீரர்கள் குறிக்கும் தங்களது கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர் இறுதி போட்டியில் இந்திய அணி ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்க நினைத்தால் ஜடேஜாவிற்கே அணியில் இடம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தொடரில் ஆல்ரவுண்டர் ஜடேஜா அணியின் வெற்றிக்கு கை கொடுப்பார் என தான் நம்புவதாகவும் பனேசர் தெரிவித்துள்ளார்.