நான் இன்னும் இருக்கிறேன் என்பதை இந்த உலகத்து காட்டிவிட்டார் தல தோனி : கேப்டன் ஜட்டு புகழாரம்

MS Dhoni Ravindra Jadeja IPL 2022
By Irumporai Apr 22, 2022 07:32 AM GMT
Report

நான் இன்னும் இருக்கிறேன் என உலகிற்கு மீண்டும் காட்டியுள்ளார் தோனி என  கேப்டன் ஜடேஜா புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் நேற்று சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின, இந்த போட்டியில் தோனி தன்னை ஒரு ஃபினிஷராக மீண்டும் நிரூபித்ததால் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்களை குவித்தது. இதன் பின்னர் களமிறங்கிய சென்னை அணியால் சரியான வேகத்தில் ரன் அடிக்க முடியவில்லை.

நான் இன்னும் இருக்கிறேன் என்பதை இந்த உலகத்து காட்டிவிட்டார்  தல தோனி : கேப்டன் ஜட்டு புகழாரம் | Jadeja On Dhonis Latest Houdini Act

ருதுராஜ் கெயிக்வாட் டக் அவுட், மிட்செல் சாண்ட்னர் 11, ஷிவம் தூபே 13, ஜடேஜா 3 என சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். உத்தப்பா 30 ரன்கள், அம்பத்தி ராயுடு 40 மட்டும் பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டனர்.

இதனால் சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. உனத்கட் வீசிய இந்த ஓவரில் முதல் பந்திலேயே பிரிட்டோரியஸ் அவுட்டானார். 2வது பந்தில் டுவைன் பிராவோ சிங்கிள் அடிக்க ஸ்ட்ரைக்கிற்கு தோனி வந்தார்.

கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் தோனி 6, 4, 2, 4 என அடுத்தடுத்து அதிரடி காட்டி த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

இந்த நிலையில் தோனியின் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணியின் கேப்டன் ஜடேஜா :

ஒரு கட்டத்தில் ஆட்டத்தின் போக்கு எங்களைய நிலைகுலைய செய்தது, பிறகு எங்களுக்கு தெரியும் தோனி இருக்கிறார் என்று. கடைசி பந்து வரை அவர் இருந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

இந்த ஆட்டத்தின் மூலம் நான் இன்னும் இருக்கிறேன் என்பதை மீண்டும் உலகுற்கு காட்டியுள்ளார் என கேப்டன் ஜடேஜா புகழாரம் சூடியுள்ளார்.